நதிமூலம்

வாழ்வும் பணியும்

தமிழகத்தில் மாபெரும் சமூகப் புரட்சிக்குக் கால்கோளிட்ட தந்தை பெரியார் பிறந்த நகரம் ஈரோடு. அந்நகருக்கு மிக அருகில் அமைந்த ஊர் சென்னிமலை. அவ்வூரில் வாழ்ந்த திரு செ. இரா. நடராசன்-திருமதி வள்ளியம்மாள் இணையருக்கு 28.09.1933இல் பிறந்தவர் ந. ஜெகதீசன். இவருக்குத் தமையர் இருவர், தம்பியர் ஐவர், தங்கை ஒருவர் ஆவர்.

குடும்பச் சூழல் தமிழ்ச் சூழலாக அமைந்தமையால் பாப்புனையும் ஆற்றல் இயல்பாகவே வாய்க்கப் பெற்றார் ஜெகதீசன். பள்ளிப் பருவந்தொட்டுக் கவிதைப் படைப்பில் அவர் ஈடுபடலானார். தமிழ்மீது கொண்ட தணியாத காதலால் ஜெகதீசன், ‘தமிழன்பன்’ என்னும் புனைபெயர் பூண்டார். ஈரோட்டில் மதரசா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிவந்த நாள்களில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் கவியரங்குகளில் பங்கேற்ற வேளைகளில் அவர்தான் ஈரோட்டைத் தமிழன்பனோடு இணைத்து அழைத்தார். அவ்வடிவமே அவரது இயற்பெயரினும், மலையமான், விடிவெள்ளி என்னும் அவரது வேறு புனைபெயர்களினும் தமிழ்கூறு நல்லுலகில் நிலைபெற்றுவிட்டது. அவ்வாறே தமிழ் இலக்கிய வரலாற்றிலும் அப்பெயரே நிலைத்துவிட்டது. .

ஈரோடு தமிழன்பன் 1972 அக்டோபர் 26ஆம் நாள் சாந்தகுமாரி அவர்களை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். அவர்களது இல்லறப் பயனாக ஆண்கள் இருவர் பிறந்தனர். மூத்த மகனுக்குப் பாப்லோ நெருதா என்றும் இளைய மகனுக்குப் பாரதிதாசன் என்றும் பெயர் சூட்டியதிலிருந்தே ஈரோடு தமிழன்பனின் கொள்கைப் பிடிப்பையும் கவிதை ஈடுபாட்டையும் அறிந்துகொள்ளலாம். பாப்லோ நெருதா இப்போது சென்னையில் புகழ் பெற்ற அறுவை மருத்துவர்களுள் ஒருவர் ஆவார். பாரதிதாசன் அமெரிக்காவில் புகழ் பெற்ற மூளை நரம்பியல் அறுவை மருத்துவர் ஆவார்.
ஈரோடு தமிழன்பன் சென்னிமலையில் பள்ளிப் படிப்பையும், கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்விப் படிப்பையும் பெற்ற பின்னர்ச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டமும் தனிப்பாடல் திரட்டு என்னும் பொருண்மையில் ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டமும் பெற்றவர். சென்னைப் புதுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். ஈரோடு தமிழன்பன் இந்தியா முழுவதும் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அரபு ஐக்கியக் குடியரசு, அமெரிக்கா முதலிய அயல்நாடுகள் பலவற்றிற்கும் பயணம் செய்த பெருமைக்குரியவர். மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, மெய்யியல், அறிவியல்சார் பன்னாட்டுக் காலாண்டிதழின் ஆசிரியராகவும் அவர் திகழ்ந்துவருகிறார். பாலச்சந்தர் இயக்கிய ‘அச்சமில்லை அச்சமில்லை’, மற்றும் ‘ஏழாவது மனிதன் ‘ பட இயக்குநர் அரிஹரன் இயக்கிய ‘நீயும் நானும் ‘ என்னும் திரைப்படத்திற்கும் அவர் பாடல் இயற்றியுள்ளார். ரோம் நகரில் சிறந்த படைப்புக்கான விருது பெற்ற ‘வசந்தத்தில் ஒரு வானவில் ‘ எனும் படத்திற்கு இணை இயக்குநராகவும் கதைவசன ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பள்ளித் தமிழாசிரியர், கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், குறும்பாக் கவிஞர், குழந்தைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்படப் பாடலாசிரியர், தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளார், ஓவியர், அரிமா நோக்கு இதழாசிரியர், ஓய்வறியாப் படிப்பாளி, 90க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த ஓயாத படைப்பாளி எனப் பன்முகப்பட்ட ஆளுமைளை உடையவர் அவர். இவை எல்லா வற்றுக்கும் மேலாகத் தலைசிறந்த மனிதராகவும் திகழ்பவர் அவர்.
சிலரைப்போலத் தத்துவங்களைத் தடுமாற விட்டுவிட்டுத் தடுமாற்றங்களை எல்லாம் தத்துவமாக்கிக் கொண்டிருப்பவரோ, சித்தாந்தங்களைச் சிதற விட்டுவிட்டுச் சிதறல்களை எல்லாம் சித்தாந்தமாக்கிக்கொண்டிருப்பவரோ அல்லர் அவர். கொண்ட கொள்கையில்-அதாவது பெரியாரியம், மார்க்சியம், தமிழ்த் தேசியம் என்னும் கொள்கையில் என்றும் மாறாத உறுதி பூண்டவர் அவர்; எந்நிலையிலும் நிறம் மாறாத-என்றும் வாடாத நறுமலர் அவர்.

விருதுகள்… பட்டங்கள்… பரிசுகள்

1. 1964 ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை அளித்த தங்கப்பதக்கம்
2. 1973 தமிழன்பன் கவிதைகள் எனும் சிறந்த நூலுக்காகத் தமிழக அரசு வழங்கிய முதல் பரிசு
3. 1991 தமிழக அரசு அளித்த பாரதிதாசன் விருது
4. 1996 அமெரிக்காவில் வாசிங்டன்-பால்டிமோர்த் தமிழ்ச் சங்கம் வழங்கிய புதுக்கவிக்கோ விருது
5. 1997 ஒரு மழை நாளில் எனும் சிறந்த சிறுகதைப் படைப்பிற்காக பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய முதல் பரிசு
6. 1998 முரசொலி அறக்கட்டளை அளித்த கலைஞர் விருது
7. 1999 தமிழக அரசு நல்கிய கலைமாமணி விருது
8. 1999 ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை வழங்கிய இராணா இலக்கிய விருது
9. 2000 பனி பெய்யும் பகல் எனும் சிறந்த கவிதை நூலுக்காகத் தமிழக அரசு வழங்கிய முதல் பரிசு
10. 2001 பாரதிதாசனோடு பத்தாண்டுகள் எனும் நூலுக்காகப் பாவேந்தர் பாசறை அளித்த முதல் பரிசு
11. 2001 தமிழக அரசு அளித்த குறள் பீட விருது
12. 2002 கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கிய தமிழவேள் உமாமகேசுவரனார் விருது
13. 2003 ஒரு வண்டி சென்ரியு எனும் சிறந்த நூலுக்காகத் திருப்பூர்த் தமிழ்ச் சங்கம் வழங்கிய முதல் பரிசு
14. 2003 செய்யாறு தமிழ்ச் சங்கம் வழங்கிய கவிப்பேரருவி விருது
15. 2004 சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய தமிழ் வாகைச் செம்மல் விருது
16. 2004 வணக்கம் வள்ளுவ! என்னும் கவிதை நூலுக்காகச் சாகித்திய அகாதெமி அளித்த விருது
17. 2004 சிற்பி இலக்கிய விருது
18. 2005 திராவிடர் கழகம் நல்கிய பெரியார் விருது
19. 2005 தஞ்சை பாரத் கல்வி நிறுவனக் குழுமம் வழங்கிய கவிஞானி விருது
20. 2008 அமெரிக்க மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருது
21. 2008 சென்னைக் கம்பன் கழகம் வழங்கிய விருது
22. 2010 தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர்-விற்பனையாளர் சங்கம் (BAPASI) வழங்கிய கலைஞர் பொற்கிழி விருது
23. 2011 விடியல் (Dawn) அமைப்பு அளித்த பாரதி விருது
24. 2011 கவிக்கோ விருது
25. 2014 கவிமுகில் அறக்கட்டளை-விழிகள் பதிப்பகம் வழங்கிய கவிப்பேரிமையம் விருது
26. 2016 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய செம்மொழி ஞாயிறு விருது
27. 2017 அமெரிக்க மெட்ரோப்பிளக்ஸ் தமிழ்ச் சங்கம் வழங்கிய மகாகவி விருது
28. 2017 எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய பரிதிமாற்கலைஞர் விருது
29. 2017 தினத்தந்திக் குழுமம் வழங்கிய சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது
30. 2018 தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம் வழங்கிய ஊடகச் சிற்பி விருது
31. 2019 இந்தியச் சமுதாய மக்களாட்சியக் கட்சி (S.D.P.I.) வழங்கிய கவிக்கோ விருது
32. 2019 தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சங்கம் வழங்கிய கவிச்செம்மல் விருது
33. 2020 உலகத் தமிழ் ஹைக்கூ மன்றம் வழங்கிய பாஷோ விருது

படைப்புகள் : (கவிதைகள்)

1.1968 கொடி காத்த குமரன் (சிறார் வில்லுப்பாட்டு),
2.1970 சிலிர்ப்புகள் (வசன கவிதைகள்), சென்னை: பாரி நிலையம்.
3. 1970 தமிழன்பன் கவிதைகள் (கவிதைகள்), சென்னை: மங்கள நூலகம்.
4.1973 தோணி வருகிறது (கவிதைகள்), சென்னை: மணிவாசகர்பதிப்பகம்
5.1973 விடியல் விழுதுகள் (கவிதைகள்), சென்னை: பொதிகைப் பதிப்பகம்.
6.1978 தீவுகள் கரையேறுகின்றன (கவிதைகள்), சென்னை பாப்லோ நெருடா பதிப்பகம்.
7.1982 அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
8.1982 பரணி பாடலாம் (கவிதைகள்), சென்னை : பூம்புகார் பதிப்பகம்.
9.1982 காலத்திற்கு ஒரு நாள் முந்தி (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
10.1984 ஊமை வெயில் (கவிதைகள்), சிவகங்கை: அன்னம்.
11.1984 நிலா வரும் நேரம் (கவிதைகள்), சென்னை: நர்மதா பதிப்பகம்.
12.1985 சூரியப் பிறைகள் (ஹைக்கூக் கவிதைகள்), சென்னை: நர்மதா பதிப்பகம்.
13.1985 திரும்பிவந்த தேர்வலம் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
14.1986 கருவறையிலிருந்து ஒரு குரல் (கவிதைகள்), சென்னை: திருமகள் நிலையம்.
15.1989 நாமிருக்கும் நாடு (கவிதைகள்), சென்ன: பாப்லோ பாரதிபதிப்பகம்.
16.1989 ஊர் சுற்றிவந்த ஓசை (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
17.1990 கண்ணுக்கு வெளியே சில கனாக்கள் (கவிதைகள்), சென்னை: நர்மதா பதிப்பகம்.
18.1990 குடைராட்டினம் (சிறார் கவிதைகள்), சென்னை: கிறித்தவ இலக்கியச் சங்கம்.
19.19.1991 கிழக்குச் சாளரம் (கவிதைகள்), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
20.1995 என் வீட்டு எதிரே ஒரு எருக்கஞ்செடி (கவிதைகள்), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
21.1998 நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
22.1998 பனி பெய்யும் பகல் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
23.1999 உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்… வால்ட் விட்மன்! (தமிழ்ப் புதுக்கவிதையிலான பயண நூல்), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
24.1999மின்மினிக்காடு (கவிதைகள்), சென்னை: மருதா பதிப்பகம்.
25.2000 வணக்கம் வள்ளுவ! (சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிதைப் படைப்பு), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
26.2001ஒரு வண்டி சென்ரியு (முதல் தமிழ் சென்ரியுக் கவிதைத் தொகுதி), சென்னை: மருதா பதிப்பகம்
27.2002 தமிழோவியம் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
28.2002 சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள் (முதல் தமிழ் லிமரைக்குக் கவிதைத் தொகுதி), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்
29.2002 வார்த்தைகள் கேட்ட வரம் (கவிதைகள்), சென்னை: விழிகள் பதிப்பகம்.
30.2003 இவர்களோடும் இவற்றோடும் (கவிதைகள்), சென்னை: விழிகள் பதிப்பகம்.
31.2003 இரவுப் பாடகன் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
32.2004 கனாக் காணும் வினாக்கள் (வினாக்களாலான முதல் தமிழ்க் கவிதைத் தொகுதி), சென்னை: விழிகள் பதிப்பகம்.
33.2004 மின்னல் உறங்கும்போது (கவிதைகள்), சென்னை: துர்க்கா பதிப்பகம்.
34.2005 கதவைத் தட்டிய பழைய காதலி (கவிதைகள்), சென்னை: விழிகள் பதிப்பகம்.
35.2005 கவின் குறுநூறு (கவிதைகள்), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
36.2005 அன்னை மடியே உன்னை மறவேன் (கவிதைகள்), சென்னிமலை: பாலமுருகன் பதிப்பகம்.
37.2006 மூன்று பெயர்களும் என் முகவரிப் புத்தகமும் (கவிதைகள்), சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
38.2008 இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம் (கவிதைகள்), சென்னை: ரஹ்மத் பதிப்பகம்.
39.2008 சொல்ல வந்தது (கவிதைகள்), சென்னை: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்.
40.2009 ஓலைச்சுவடியும் குறுந்தகடும் (கவிதைகள்), சென்னை: விடிவெள்ளி வெளியீடு.
41.2009 என் அருமை ஈழமே! (கவிதைகள்), சென்னை: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்.
42.2011 கதை முடியவில்லை (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
43.2011 கனவின் சில பக்கங்கள் (கவிதைகள்), சென்னை: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்.
44.2012 கஜல் பிறைகள் (முதல் தமிழ்க் கஜல் கவிதைத் தொகுதி), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
45.2013 மழை மொக்குகள் (யோரன் குறள்) (குறட் பாக்கள்), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
46.2013புத்தகம் என்பது , ( கவிதைகள்)சென்னை , விழிகள் பதிப்பகம்
47.2014 ஒரு கூடைப் பழமொன்ரியு (பழமொழி, சென்ரியு இணைந்த முதல் தமிழ்க் கவிதைத் தொகுதி), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
48.2014 தத்துபித்துவம் (கவிதைகள்), சென்னை: விழிகள் பதிப்பகம்.
49.2015 புதுநெறி காட்டிய புரட்சிக் கவிஞர் (கவிதைகள்), சென்னை: விழிகள் பதிப்பகம்.
50.2015 இன்னும் சில வினாக்கள் (கவிதைகள்), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
51.2015 திசை கடக்கும் சிறகுகள் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
52.2016 ஐந்திணை ஹைகூ , ( கவிதைகள்) ,சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்
53.2016 இரு சுடர்கள், ( கவிதைகள்) ,சென்னை : பாப்லோ பாரதி பதிப்பகம்
54.2017 மாற்று மனிதம் , ( கவிதைகள்) ,சென்னை பூம்புகார் பதிப்பகம்)
55.2017 வள்ளிச்சந்தம் , ( சிறார் பாடல்கள்) ,சென்னை : பாரதி புத்தகாலயம்
56.2018 பூக்களின் விடைகள் புலரி கைகளில் , ( கவிதைகள்) ,புதுச்சேரி: ஒருதுளிக்கவிதை
57.2018 சிறுசிறு சூரியர்கள் , ( கவிதைகள்) ,புதுச்சேரி: ஒருதுளிக்கவிதை
58.2018 இசை அமைக்கும் இமை அசைப்புகள் , ( இசைக் கவிதைகள்) புதுச்சேரி: ஒருதுளிக்கவிதை
59.2019 ஒரு கவளம் சோறும் ஒரு கவிதையும் , ( கவிதைகள்) ,சென்னை : அரிமா நோக்கு வெளியீடு
60.2019 நட்பூ , (கவிதைகள் )சென்னை :பாப்லோபாரதி பதிப்பகம்
61.2020. இன்னிசை அளபெடைச்சென்னிமலை ( கவிதைகள்), புதுச்சேரி , ஒருதுளிக்கவிதை ,
62.2020 ஞாபகச் சாளரம் , ( கவிதைகள்) ,புதுச்சேரி , ஒருதுளிக்கவிதை ,
63.2020 இன்னும் இசை உண்டு இந்த வீணையில், ( கவிதைகள்) ,புதுச்சேரி , ஒருதுளிக்கவிதை ,
64.2020 முகமொழி 100 , ( கவிதைகள்) ,புதுச்சேரி , ஒருதுளிக்கவிதை ,
65.2020 ஒளியின் தாயகம் ஒப்பிலா நாயகம், ( கவிதைகள்) ,புதுச்சேரி , ஒருதுளிக்கவிதை ,
66.2020 காலத்தால் மறையாத கருப்புச் சூரியன் ( கவிதைகள்) , புதுச்சேரி , ஒருதுளிக்கவிதை ,

மொழிப்பெயர்ப்புகள்

1. 2011 பாப்லோ நெருதா கவிதைகள் (தமிழாக்கம்), சென்னை: பாரதி புத்தகாலயம்.
2. 2012 ஜப்பானிய ஹைகூ 100 குறிப்புரையுடன் (தமிழாக்கம்), சென்னை: விழிகள் பதிப்பகம்.
3. 2019 இறக்குமதி ( பன்மொழி ஆக்கம் , ஆங்கிலம்வழி) சென்னை , நோக்கு வெளியீடு ,

 

Translations :(Poems ) English

1. 2000 Glow Worm Woods, S.A.Sankaranarayanan (Tr.), Chennai:Marudha.
2. 2002 Whitman to Thine house I Came, S.A. Sankaranarayanan (Tr.),Chennai: Pablo-Bharathi.
3. 2002 Salutations Valluva!, S.A.Sankaranarayanan (Tr.), Chennai: Pablo-Bharathi.
4. 2003 Night Singer, K. Chellappan & N. Ramachandran (Tr.), Chennai: Pablo-Bharathi.
5. 2003Comely Gemstones Jewels , Prof SA Sankaranarayanan , Chennai ,Kal Thachhan.
6. 2013 Ghazal Crescents, S.A. Sankaranarayanan (Tr.), Chennai: Nokku.
7. 2013 Rainbuds, S. A. Sankaranarayanan (Tr.), Chennai: Pablo-Bharathi.
8. 2014 Sanity-In-Zealotry, S.A. Sankaranarayanan (Tr.), Chennai: Vizhikal Pathippakam.8.
9. 2016 Two Flames, S.A. Sankaranarayanan (Tr.), Chennai: Pablo-Bharathi.
10. 2017 What the Sun Said Last & other Poems, K. S. Subramanian (Tr.), New Delhi: Sahitya Akademi.
11. 2017 A book is.., A. Ayyasamy (Tr.), Chennai: Vizhikal Pathippakam.
12. 2017 Ainthinai Haiku, S.A.Sankaranarayanan (Tr.), Chennai: Pablo-Bharathi.
13. 2017 The Essential Erode Tamilanban, T. Amirthaganesan (Comp.), Pondicherry: Oruthulik Kavithai.
14. 2017 Questions in reverie, S. A. Sankaranarayanan (Tr.), Pondicherry: Oruthulik Kavithai.
15. 2018 Poems of Questions, Gregory James (Tr.), Chennai: Arimaa Nokku.
16. 2018 The Answers of Flowers in the hands of the Dawn, T. Amirthaganesan (Tr.), Pondicherry: Oruthulik Kavithai.
17. 2019 Micro Suns , T. Amirthaganesan (Tr.), Pondicherry: Oruthulik Kavithai.
18. 2019 Lyrics set to Music by Lids of Eyes T. Amirthaganesan (Tr.), Pondicherry: Oruthulik Kavithai.
19. 2019 Gregory James (Tr.), Glow-worm Woods, Chennai: Arimaa Nokku.
20. 2019 A Morsel of Rice and a Poem, S.A. Sankaranarayanan (Tr.), Chennai: Arimaa Nokku.
21. 2020 Innisai Alapedai ch Chennimalai ,S.A. Sankaranarayanan (Tr.), Pondicherry: Oruthulik Kavithai
22. 2020 Flowers of Friendship , Prof. Akilan Ethiraju , Oruthulik Kavithai, Pondicherry

 

Translations : ( Other Languages ) Hindi

1. 2017 Vaikalpiktha Manavatha mae (Hindi), R. Sowrirajan & B. Parameswari (Tr.), Chennai: Vizhikal Pathippakam.
2. 2017 Gazhals (Hindhi) H. Balasubramanian , Pondicherry: Oruthulik Kavithai.
3. 2017 Tamilanban’s poems (Hindi ), Dr. Vijayalakshmi ,(Tr.) Pondicherry: Oruthulik Kavithai. Spanish
4. 2017Multilingual Edition , T Amirthaganesan ( Comp.), Pondicherry: Oruthulik Kavithai. Spanish:Dr. Srivani Tumu
5. 2019 Gregory James & Loraine Bock (Tr.), Poemas de Preguntas (Spanish), Chennai: Arimaa Nokku.

German
Multilingual Edition , T Amirthaganesan ( Comp.), Pondicherry: Oruthulik Kavithai.: Vatchala Vijayakumar & Cheralathan Panneerselvan.
French
Multilingual Edition , T Amirthaganesan ( Comp.), Pondicherry: Oruthulik Kavithai.:Aishwarya Baskaran
Mandrin
Multilingual Edition , T Amirthaganesan ( Comp.), Pondicherry: Oruthulik Kavithai.: Aishwarya Baskaran
Chinese
Multilingual Edition , T Amirthaganesan ( Comp.), Pondicherry: Oruthulik Kavithai.: Aishwarya Baskaran
Arabic
Multilingual Edition , T Amirthaganesan ( Comp.), Pondicherry: Oruthulik Kavithai.: Aishwarya Baskaran
Urdu
Multilingual Edition , T Amirthaganesan ( Comp.), Pondicherry: Oruthulik Kavithai.:Nariyampattu M.A Salam

 

படைப்புகள்: (உரைநடை)

1. 1967கவி பாடின காவலர் (சிறார் கதைகள்), சென்னை: பாலரவி கம்பெனியார்
2. 1968 கரும்புச்சுவைக் கதைகள் (சிறார் கதைகள்), சென்னை: பாலரவி கம்பெனியார்
3. 2001கண்மணிக்குச் சில கதைகள் என்ற பெயரில் சென்னை: விழிகள் பதிப்பகம்)
4. 1965 நெஞ்சின் நிழல் (புதினம்), சென்னை: பாரி நிலையம்.
5. 1965 தாயின் மணிக்கொடி (கட்டுரைகள்), ஈரோடு சிவலிங்கம் நூற்பதிப்புக் கழகம்
6. 1987 தனிப்பாடல் திரட்டு – ஓர் ஆய்வு (முனைவர் பட்ட ஆய்வேடு – சென்னைபாப்லோபாதிப்பகம்
7. 1988 சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள் (கட்டுரைகள்), சென்னை திருமகள்நிலையம்
8. 1990 என்னைக் கவர்ந்த பெருமானார் (சொற்பொழிவுத் தொகுப்பு), சென்னை: இஸ்லாமிய அறக்கட்டளை நிறுவனம்.
9. 1990 கவிதைச் சிந்தனைகள் (கட்டுரைகள்), சென்னை பயன்பதிப்பகம்
10. 1992 இலக்கியப் பயன் (கட்டுரைகள்), சென்னை: பயன் பதிப்பகம்.
11. 1994 புரட்சிக் கவிஞர் கவிதைகளில் தமிழ், தமிழன், தமிழ்நாடு (சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்திய அறக்கட்டளைச் சொற்பொழிவுத்தொகுப்பு), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
12. 1995 ஒரு மழை நாளில் (சிறுகதைகள்), சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
13. 1999 அணைக்கவா என்ற அமெரிக்கா (பயண இலக்கியம்), சென்னை : பூம்புகார் பதிப்பகம்.
14. 2000 பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் (உரைநடை), சென்னை: விழிகள் பதிப்பகம்.
15. 2001 கலையா? கைவினையா? (கட்டுரைகள்), சென்னை: மருதா.
16. 2002 மதிப்பீடுகள் (கட்டுரைகள்), சென்னை: மருதா.
17. 2002 ஈர நெருப்பு (நாடகங்கள்), தஞ்சாவூர்: அய்யா நிலையம்.
18. 2006 தேம்சு நதியில் தேன் தமிழ் அலைகள் (உரைநடை), சென்னை பிரேமாபதிப்பகம்
19. 2007 பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா, சென்னை: பாப்லோ நெருதா ஸ்பானிய-லத்தீன் அமெரிக்க ஆய்வு நிறுவனம்.
20. 2007 ஈரோடு தமிழன்பன் பார்வையில் டேக்வாண்டா ( தற்காப்புக்கலை) காஞ்சிபுரம் மாவட்டம் , டேக்குவாண்டா சங்கம்
21. 2008 கணைகளும் கனிகளும் (உரைநடை), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
22. 2010 கண்கள் கடந்த காகித வீதிகள் (உரைநடை), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
23. 2013 வீரத் துறவி விவேகானந்தரும் மனோன்மணியம் சுந்தரனாரும் ஒரு சந்திப்பில்…(கட்டுரை), சென்னை: தென்புத்தூர் பதிப்பகம்.
24. 2014 21. வாழ்க்கையின் வெற்றிக்கு வள்ளுவர் (கட்டுரை), சென்னை: தென்புத்தூர் பதிப்பகம்.
25. 2016 கலாம் என்னும் கலங்கரை விளக்கு (வாழ்க்கைவரலாறு), சென்னை : பூம்புகார் பதிப்பகம்
26. 2019 ஹைக்கூ-சென்ரியு ஓர் எளிய கையேடு, வந்தவாசி: அகநி வெளியீடு.
27. 2019தலைவாயில் , ( கட்டுரைகள்)சென்னை , அரிமா நோக்கு வெளியீடு,

 

கவிதை தொகுப்புகள் : (பிறர் உருவாக்கிவை )

1. 2000 திசைக்குள் திசைகள் , ( 80 களில் வெளி வந்த தமிழன்பனின் கவிதை நூல்களின் தொகுப்பு) சென்னை: மருதா பதிப்பகம்
2. 2003கவின் பரல்கள் (தேர்ந்தெடுத்த கவிதைகள்), முரளி அரூபன் (தொ.ஆ.), சென்னை: கல்தச்சன்.
3. 2007. ஈரோடு தமிழன்பன் கவிதைகள்-தொகுதி 1, : பேரா. வ. ஜெயதேவன்( தொ.ஆ) சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
4. 2007 ஈரோடு தமிழன்பன் கவிதைகள்-தொகுதி 2, : பேரா. வ. ஜெயதேவன்( தொ.ஆ) சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
5. 2007 ஈரோடு தமிழன்பன் கவிதைகள்-தொகுதி 3, : பேரா. வ. ஜெயதேவன்( தொ.ஆ)சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
6. 2007 ஈரோடு தமிழன்பன் கவிதைகள்-தொகுதி 4, : பேரா. வ. ஜெயதேவன்( தொ.ஆ)சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
7. 2007 ஈரோடு தமிழன்பன் கவிதைகள்-தொகுதி 5, : பேரா. வ. ஜெயதேவன்( தொ.ஆ)சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
8. 2009 பூத்தூவும் நேரம் (தேர்ந்தெடுத்த கவிதைகள்), சென்னிமலை தண்டபாணி (தொ.ஆ.), சென்னை: கவிதா பப்ளிகேஷன்
9. 2016 ஈரோடு தமிழன்பன் ஆயிரம் (தேர்ந்தெடுத்த 1000 கவிதைகள்), தி.அமிர்தகணேசன் (தொ. ஆ.), சென்னை: விழிகள் பதிப்பகம்.
10. 2017 மகாகவி ஈரோடு தமிழன்பன் வாழ்வியல் கவிதைகள் (கவிதைகள்), தி. அமிர்தகணேசன் (தொ. ஆ.), புதுச்சேரி: ஒருதுளிக் கவிதை.
11. 2019 ஈரோடு தமிழன்பன் கவிதைகள்-தொகுதி 6, : பேரா. வ. ஜெயதேவன்( தொ.ஆ)சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
12. 2019 குடைக்குள் வானம் ( கவிதை நறுக்குகள்) நியுயார்க்சண்முகம் பெரியசாமி, ( தொ.ஆ)புதுச்சேரி: ஒருதுளிக் கவிதை.
13. 2020 விடியல் புதிது வெளிச்சம் புதிது, தி.அமிர்தகணேசன் ( தொ.ஆ.) ( புதிய வகைமைகளின் தொகுப்பு )புதுச்சேரி , ஒருதுளிக்கவிதை

 

திறனாய்வுகள் : (தமிழன்பன் படைப்புகள் மீதானவை)

1. 1996 ,தமிழன்பனும் தமிழும் , சுந்தரபெருமாள் கோயில் ந.இராமலிங்கம் ,
2. 2005தமிழன்பன் படைப்பும் பார்வையும் , கோவை ஞானி , சென்னை: மணிவாசகம் பதிப்பகம்
3. 2005 கலாநிதி நா. சுப்பிரமணியன், திறனாய்வு நோக்கில் ஈரோடு தமிழன்பன், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
4. 2007 ஈரோடு தமிழன்பன் படைப்புகளில் நடையியல் , முனைவர் தி.முருகன் , சென்னை : தி பார்கர் வெளியீடு
5. 2007 தமிழன்பன் படைப்புகளில் சமுகம், பேரா. சொக்கலிங்கம், நாட்டுச்சாலை : காந்தி பதிப்பகம்
6. 2007 தமிழன்பன் படைப்புகளில் பெண்ணியம் , முனைவர் தெ.வாசுகி இளவரசு, சென்னை : தி பார்கர்
7. 2007 பாப்லோ நெருதாவும் தமிழன்பனும் , பா. குணசேகரன், சென்னை: கவிதா பதிப்பகம்
8. 2007 வ. ஜெயதேவன் & ய. மணிகண்டன், ஈரோடு தமிழன்பன்: கவிதைப் பரிமாணங்கள்–தொகுதி 1,சென்னை: இலக்கிய வீதி.
9. 2007 வ. ஜெயதேவன் & ய. மணிகண்டன் (ப. ஆ.), ஈரோடு தமிழன்பன்: கவிதைப் பரிமாணங்கள்–தொகுதி 2, சென்னை: இலக்கிய வீதி.
10. 2007 மறைமலை, இ., அங்கதத்திற்கு ஒரு தமிழன்பன், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
11. 2009 தமிழன்பன் படைப்புகளில் உத்திகள்,முனைவர் இராஜாராம் , திருச்சி: பார்த்திபன் பதிப்பகம்
12. 2012 வ. ஜெயதேவன் (ப. ஆ.),ஈரோடு தமிழன்பன்: சில பதிவுகள், சென்னை: துர்க்கா பதிப்பகம்.
13. 2012 ஈரோடு தமிழன்பன் கவிதையாக்கம்: சில தடத்தெரிவுகள், சென்னை: விடிவெள்ளி வெளியீடு.
14. 2014அமிர்தகணேசன், தி. தமிழன்பன் ஒரு மகாகவி, புதுச்சேரி: சபானந்தாச்சார்யா பதிப்பகம்.
15. 2014தமிழென்(ண்)பது தமிழன்பன் , பா. இரவிக்குமார், தி. அமிர்தகணேசன், சீனு. தமிழ்மணி , புதுச்சேரி: சபானந்தாச்சார்யா பதிப்பகம்
16. 2014 கவிதையின் அழியாத காதலன் , பேரா .பா .ரவிக்குமார் , சென்னை: விழிகள் பதிப்பகம்
17. 2001 Methods & meanings in Tamilanban, Prof SA Sankaranarayanan , Chennai: Marutha Publication.
18. 2003 V. Jayadevan & Y. Manikandan (Eds.) The Frontiers of Tamilanban Poetry, Chennai: Vizhigal Pathippagam.
19. 2012 Universal Vision And Dialogue With kTradition In Tamilanban’s Poetry , Dr. K. Chellappan , Chennai , NCBH
20. 2014 Dr. Maraimalai Ilakkuvanar, Tamilanban: Philosopho Fanaticism, Chennai: Vizhigal Pathippagam.
21. 2012 Blood and sweat in a capsule, Dr. Maraimalai Ilakkuvanar, Chennai , Nokku
22. 2019 Dimensions of Erode Tamilanban , T. Amirthaganesan ( Ed) , Pondicherry: Oruthulik Kavithai.